Latestமலேசியா

ஜப்பானில் வெவ்வேறு மாகாணத்தில் கரடி தாக்கி இருவர் பலி

டோக்கியோ, அக்டோபர்- 8,

ஜப்பானின் நாகானோ மாகாணத்திலும் மியாகி மாகாணத்திலும் நடைபெற்ற இரு வெவ்வேறு நிகழ்வுகளில், கரடி தாக்குதலால் இருவர் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நாகானோ மாகாணத்தின் காட்டுப்பகுதியில் ஆடவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் அவரது முகம் மற்றும் கழுத்தில் கரடி நகங்கள் பதிந்த காயங்கள் காணப்பட்டதாக தகவல் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, மியாகி மாகாணத்தில் காளான் தேடிச் சென்ற பெண்ஒருவர் விலங்கு தாக்குதலால் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, ஜப்பானின் கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் கரடி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மக்களும் காளான் மற்றும் பிற காட்டுப்பொருட்களைத் தேடிச் செல்லும் இலையுதிர் காலத்தில் இப்படியான சம்பவங்கள் பெருமளவில் பதிவாகின்றன.

அக்டோபர் 8: ஜப்பானின் நாகானோ மாகாணத்திலும் மியாகி மாகாணத்திலும் நடைபெற்ற இரு வெவ்வேறு நிகழ்வுகளில், கரடி தாக்குதலால் இருவர் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நாகானோ மாகாணத்தின் காட்டுப்பகுதியில் ஆடவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸார் அவரது முகம் மற்றும் கழுத்தில் கரடி நகங்கள் பதிந்த காயங்கள் காணப்பட்டதாக தகவல் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, மியாகி மாகாணத்தில் காளான் தேடிச் சென்ற பெண்ஒருவர் விலங்கு தாக்குதலால் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, ஜப்பானின் கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் கரடி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மக்களும் காளான் மற்றும் பிற காட்டுப்பொருட்களைத் தேடிச் செல்லும் இலையுதிர் காலத்தில் இப்படியான சம்பவங்கள் பெருமளவில் பதிவாகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!