Latestமலேசியா

செலாயாங்ல் கோழியறுக்கும் இடங்களில் அதிரடிச் சோதனை; 36 வெளிநாட்டவர் கைது

செலாயாங், மே-30 – சிலாங்கூர், செலாயாங் மொத்த வியாபாரச் சந்தையில் கோழிகளை அறுக்கும் 6 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், வேலை பெர்மிட் இல்லாத 36 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.

குடிநுழைவுத் துறையும் சிலாங்கூர் இஸ்லாமிய சமய மேம்பாட்டுக் கழகமும் இணைந்து அச்சோதனையை நடத்தின.

பெரும்பாலும் வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்டு வரும் அக்கடைகள் அசுத்தமான முறையில் இயங்கி வருவது கண்டறியப்பட்டது.

தரையில் கோழி இரத்தம் சிந்தியும் கோழிக் கழிவுகள் சிதறியும் கிடந்தன.

6 கடைகளில் ஒரு கடை மட்டுமே உள்நாட்டவரால் நடத்தப்பட்டு வருகிறது.

அதிகாரிகளைக் கண்டதும் பல தொழிலாளர்கள் தப்பியோட முயன்றனர்; எனினும் அனைவரும் வளைத்துப் பிடிக்கப்பட்டனார்.

கைதான 36 பேரில் 25 பேர் மியன்மார் நாட்டவர்கள், 10 பேர் வங்காளதேசிகள், ஒருவர் இந்தோனேசியர்.

விசாரணைக்கு உதவ 4 உள்ளூர் ஆடவர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!