
சென்னை, அக்டோபர்-14,
தூத்துக்குடி – சென்னை இடையே இயக்கப்பட்ட இண்டிகோ ATR விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் முன்பக்கக் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் நிலைமை பரபரப்பானது.
உடனடியாக விமானிகள் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, விமானம் அவசரமாக சென்னையில் தரையிறங்கியது.
விமானத்திலிருந்த 75 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
எனினும், விமானம் முழுக் கட்டுப்பாட்டில் இருந்ததால் எந்த அவசர நிலையும் அறிவிக்கப்படவில்லை.
பின்னர் விமானம் பராமரிப்புக்காகத் தனி பகுதியில் நிறுத்தப்பட்டது.
கண்ணாடியின் 3 அடுக்குகளும் சேதமடையாதவரை இது ஆபத்தானதல்ல; ஆனால் பாதுகாப்பு பரிசோதனைகள் கண்டிப்பாக வலுப்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இது கடந்த 4 நாட்களில் இண்டிகோ நிறுவனத்தின் இரண்டாவது கண்ணாடி பிளவு சம்பவமாகும்.
இதற்கு முன்பு, மதுரை – சென்னை வழித்தடத்திலும் இதே பிரச்னை ஏற்பட்டது.
வான் போக்குவரத்து அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.