Latestமலேசியா

டயாலிசிஸ் நோயாளியின் குடும்பம் வங்கியின் முன் மறியல்; வீட்டை ஏலம் விடும் முடிவிலிருந்து பின்வாங்கிய வங்கி

சுங்கை சிப்புட், மே-14 – பேராக், சுங்கை சிப்புட்டில் வீடு ஏலத்திற்கு விடப்படவிருந்த குடும்பம், வங்கியின் முன் இன்று மறியல் நடத்தியதால், வேறுவழியின்றி AmBank வங்கி அம்முடிவிலிருந்து பின்வாங்கியது.

அக்குடும்பமும் PSM எனப்படும் மலேசிய சோசலீச கட்சியினரும் சுமார் 10 நிமிடங்களுக்கு அங்கு அமைதி மறியல் நடத்தினர்.

இதையடுத்து அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த வங்கி நிர்வாகம், சுமூகமான தீர்வுக்கு பரிந்துரைத்தது.

49 வயது குடும்பத் தலைவரான D. கோமகன், 2023-ல் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கான செலவுகள் எகிறிய அதே வேளை, இதற்கு முன் அவர் பார்த்து வந்த லாரி ஓட்டுநர் வேலையும் போய்விட்டது.

இந்நிலையில் அவரின் 46 வயது மனைவி P. ராணி மட்டுமே குடும்பத்தைச் சமாளிக்கிறார்.

1,400 ரிங்கிட் சம்பளத்தில் தொழிற்சாலையில் அவர் வேலை செய்கிறார்.

வீட்டுக் கடனுக்கான மாத தவணைப் பணமே 908 ரிங்கிட்டாகும்; ஆனால் கோமகனின் மாதாந்திர சிகிச்சை செலவும் 900 ரிங்கிட்டை எட்டுகிறது.

பள்ளி செல்லும் பிள்ளைகள் மூவர்.

இதனால் வீட்டு மாத தவணைப் பணத்தை கடந்த அக்டோபரிலிருந்து அவர்களால் செலுத்த முடியவில்லை.

இதையடுத்து வீடு ஏலத்தில் விடப்படும் அளவுக்குச் சென்று விட்டது.

எனினும் இன்றைய பேச்சுவார்த்தையின் பலனாக MRTA முறையின் கீழ் மாத தவணைப் பணம் மறுசீரமைக்கப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!