
நியூயோர்க் செப்டம்பர் -30,
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த வழக்கைத் முன்னிட்டு, யூடியூப் 22 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த வழக்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு கேபிடல் ஹில் கலவரத்துக்குப் பிறகு யூடியூப் அவரது சேனலை முடக்கியதன் விளைவாகத் தொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இழப்பீட்டுத் தொகை வெள்ளை மாளிகையில் டிரம்ப் பால் ரூம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பயன்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சட்ட நிபுணர்கள், தனியார் நிறுவன உரிமையை மீறுவதில்லை எனக் கூறினாலும், பல ஊடக நிறுவனங்கள் டிரம்ப் வழக்குகளை சமரசம் செய்து வருகின்றன.
முன்னதாக, X (ட்விட்டர்) மற்றும் மெட்டா நிறுவனங்களும் டிரம்ப் தொடுத்த வழக்குகளுக்கு பல மில்லியன் டாலர் செலுத்தியுள்ளன.