Latestமலேசியா

தியாக மனப்பான்மை கொண்டவர்கள் ஆசிரியர்கள் – பேரரசர் தம்பதியரின் ஆசிரியர் தின வாழ்த்து

கோலாலம்பூர், மே 17 – இன்று ஆசிரியர் தினக் கொண்டாட்டதை முன்னிட்டு நாடு முழுமையிலும் உள்ள ஆசிரியர்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம
( Sultan Ibrahim ) மற்றும் மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா ஷரித் சோபியா
(Raja zarith Sofiah) ஆகியோர் தங்களது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

தியாக மனப்பான்மைக் கொண்ட ஆசிரியர்கள் எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இன்றி நாட்டில் சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்காக அறிவைப் போதிப்பவர்கள் என பேரரசர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆசிரியர் இல்லாமல் அறிவு இல்லை, அறிவு இல்லாமல் முன்னோக்கி பயணம் இருளில் மூழ்கிவிடும் என அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் நமது பிரகாசமான எதிர்காலத்திற்கான பாதையை ஒளிரச் செய்யும் விளக்குகளைப் போன்றவர்கள். நகரத்திலோ அல்லது நாட்டின் தொலைதூர இடங்களிலோ உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி, உங்கள் சேவை எப்போதும் நினைவில் இருக்கும் என்று சுல்தான் இப்ராஹிம் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!