Latestமலேசியா

திரங்கானுவில் பழத்தோட்டத்தில் சுற்றித்திரிந்த சூரியக் கரடி பிடிக்கப்பட்டு காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது

சேடியூ, திரங்கானு, மே 15 – நேற்று, சுங்கை டோங் கம்போங் பெலோங்கிலுள்ள (Kampung Pelong, Sungai Tong) ஒரு பழத்தோட்டத்தில், 90 கிலோ எடையுள்ள சூரிய கரடி (sun bear) ஒன்று பிடிபட்டுள்ளது.

கடந்த மே 8 ஆம் தேதி, அப்பகுதியில் ஒரு ஆண் கரடி சுற்றித் திரிவது குறித்து, தனது துறைக்குத் தகவல் கிடைக்கப்பெற்றதாக, திரங்கானு வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (Perhilitan) இயக்குனர் லூ கீன் சியோங் (oo Kean Seong) கூறினார்.

அப்புகாரைத் தொடர்ந்து, Perhilitan அதிகாதிகளால் வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய கரடியை, மீண்டும் அதன் இயற்கையான வாழ்விடத்தில் விட்டது, ஒரு ஆரோக்கியமான சூழலைக் குறிக்கின்றது என்றார் அவர்.

மேலும் காட்டு விலங்குகள் தங்கள் தோட்டங்களுக்கு வருவதைத் தடுக்க, தோட்ட உரிமையாளர்கள், தங்கள் பண்ணைகள் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!