
கோத்தா பாரு, மே 14 – திருக்கை மீன் எலும்பினால் தனது சகோதரரை குத்தியதாக வேலையில்லாத நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மே 1 ஆம் தேதி பாச்சோக் , Kampung Pauh Jabit Beris Kubur Besarரிலுள்ள ஒரு வீட்டில் 36 வயதுடைய முகமட் இஸ்வான் சுகர்னோர் இக்குற்றத்தை புரிந்ததாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுல்கிப்ளி அபில்லா முன்னியில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அன்றைய தினம் காலை மணி 9.30 அளவில் 40 வயதுடைய முகமட் பக்ரான் என்பவரை மீன் எலும்பினால் குத்தியதாக தண்டனைச் சட்டத்தின் 326ஆவது விதி மற்றும் 326 ஆவது விதியின் கீழ் முகமட் இஸ்வான் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய அவருக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டு ஜூன் 16ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்