Latestமலேசியா

துன் டாய்ம் குடும்பத்துக்குச் சொந்தமான மெனாரா இல்ஹாம் கோபுரத்தை மீண்டும் சீல் வைத்த MACC

கோலாலாம்பூர், ஜூன்-5 – தலைநகரில் துன் டாய்ம் சைனுடின் குடும்பத்துக்குச் சொந்தமான மெனாரா இல்ஹாம் கோபுரத்தை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மீண்டும் சீல் வைத்துள்ளது.

அரசு தரப்பு துணைத் தலைமை வழக்கறிஞரின் அனுமதியைப் பெற்று, 60 மாடி அக்கோபுரத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

2001 பணமோசடி தடுப்பு, பயங்கரவாத நிதி எதிர்ப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் பெறப்பட்ட வருமான தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துன் டாய்ம் குடும்பம் தொடர்பான சொத்து குவிப்பு விசாரணையின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இதற்கு முன் 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் அக்கோபுரம் சீல் வைக்கப்பட்டது.

சீல் வைப்பதெல்லாம் விசாரணையில் சகஜமான ஒன்றென, MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி அப்போது கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!