Latestமலேசியா

தென்னை மரத்தில் ஏறும் கருவியை சோதிக்கும் போது மேலேயே மயங்கிய முதியவர்

 

தெமர்லோ, அக்டோபர்-5,

பஹாங்கில் சுமார் 60 வயது முதியவர் ஒருவர், 9.1 மீட்டர் உயரமுள்ள தென்னை மரத்தில் ஏறியபோது மயங்கி விழுந்தார்.

இச்சம்பவம் நேற்று காலை 11 மணிக்கு மேல் தெமர்லோ–மாரான் சாலையிலுள்ள தாமான் ஜெயா 2 பகுதியில் நிகழ்ந்தது.

அந்நபர், தானே உருவாக்கிய சிறப்பு கருவியைப் பயன்படுத்தி தென்னை மரத்தில் ஏற முயன்றபோது, திடீரென சோர்வால் மயங்கி, மரத்தின் மேலேயே சிக்கிக் கொண்டார்.

இதைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக அவசர உதவி எண்னை தொடர்புகொண்டனர்.

9 வீரர்கள் கொண்ட தீயணைப்பு-மீட்புக் குழு சம்பவ இடம் விரைந்தது.

அவர்கள் தீயணைப்பு வண்டியின் ஏணி மற்றும் கயிற்றைப் பயன்படுத்தி அம்முதியவரை பாதுகாப்பாக கீழிறக்கினர்.

பின்னர் அவர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அந்நபரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!