
ஜோகூர் பாரு, ஜூன் 9 – மனைவியுடன் ஏற்பட்ட தகராறினால் ஏற்பட்ட கோபம் மற்றும் மன உளைச்சலினால் போக்குவரத்துக்கு எதிராக Perodua Arus வாகனம் ஓட்டிய நபரின் வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்நபரை போலீசார் அடையாளம் கண்டதோடு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். ஜூன் 7 ஆம் தேதி, பந்தாய் லிடோவின் ஜாலான் ஸ்கூடாயில் அந்த நபர் இந்த குற்றத்தை புரிந்ததை ஒப்புக் கொண்டாதாக ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Raub Selamat தெரிவித்தார். 34 வயதுடைய அந்த நபர் போதைப் பொருளை பயன்படுத்தவில்லை என்பதோடு மதுபானம் அருந்தியிருக்கவில்லையென அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்தது.
ஜூன் 7ஆம் தேதி கம்யூனிட்டி ரோடா ஜோகூர் என்ற முகநூல் குழுவால் பகிரப்பட்ட இந்த வீடியோவை புக்கிட் அமான் கண்டறிந்ததாகவும், இதனால் உள்ளூர் போலீசார் விசாரணையைத் தொடங்கத் தூண்டியதாகவும் Raub கூறினார். வாகனப் பதிவு எண்ணை சரிபார்த்த பிறகு, விசாரணை அதிகாரிகள் அந்த ஓட்டுநரை அடையாளம் கண்டனர், பின்னர் அவர் அதே நாள் இரவு 11.30 மணிக்கு மாவட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜரானார் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் ரவுப் கூறினார்.