Latestஇந்தியாஉலகம்மலேசியா

பக்திப் பாடலுக்கு அமானுஷ்ய உருவம் ஆடியதாம்; வைரலாகும் CCTV வீடியோ

தென்காசி, ஏப்ரல்-27- தமிழகத்தின் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள ஒரு வீட்டின் CCTV கேமராவில் பதிவான மர்மக் காட்சி, தற்போது வைரலாகி வருகிறது.

ஏப்ரல் 23-ஆம் தேதி அதிகாலை எழுந்து வீட்டில் சாமி தரிசனம் செய்வதற்காக கண்ணன் என்பவர் வழக்கம் போல் சாமிப் பாடல்களை போட்டுள்ளார்.

இந்நிலையில் மறுநாள் CCTV கேமரா பதிவைப் பார்த்த போது அவர் அதிர்ச்சியடைந்தார்.

அதில் முதல் நாள் தான் போட்ட பக்திப் பாடலுக்கு ஏற்றவாறு அமானுஷ்ய உருவமொன்று நடனமாடியதாம்.

இதனால் வியப்படைந்தவர், அந்த அமானுஷ்ய உருவம் கண்டிப்பாக தங்களின் குலதெய்வமாகத்தான் இருக்கும் என நம்புகிறார்.

குலதெய்வமே நேரில் வந்து காட்சிக் கொடுத்ததாகத்தான் நாங்கள் பார்க்கிறோம் என்றார் அவர்.

தமிழகத்தின் புதியத் தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ள இவ்வீடியோவுக்கு கலவையான கருத்துகள் கிடைத்து வருகின்றன.

சிலர் ஆச்சரியத்துடன் பார்த்தாலும் இன்னும் சிலர் “இதென்ன பித்தலாட்டம்?” என கேலி செய்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!