
பத்து காவான், ஜூன் 6 – நேற்று, ஜாலான் பத்து காவான் P149-இல், சாலைக்கும் பாலத்திற்கும் இடையில் புதிதாக கட்டப்பட்ட இணைப்புப் பகுதியில், நிலம் சரிந்த சம்பவம் தொடர்பில் புகார்கள் வந்துள்ளதாக மாநில உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் தலைவர் ஜைரில் கீர் ஜோஹாரி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய, பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (பி.டி.சி) மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கான விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், விபத்துகளைத் தடுக்க ‘சீரற்ற சாலை’ எச்சரிக்கை பலகைகளை நிறுவுவதன் மூலம் PDC உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளது என்று மேலும் அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் சரிவு ஏற்படாதவாறு வலுவான சாலை நிலைத்தன்மையை உறுதி செய்வதையும், பழுதுபார்க்கும் செலவுகள் முழுவதையும் ஒப்பந்ததாரார்கள் ஏற்பார்கள் என்பதை ஜோஹாரி அறிவித்துள்ளார்.