
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 27 – மலேசிய பனாசோனிக் (Panasonic) நிறுவனம் “பசுமை எதிர்காலத்திற்கான ஆற்றல் – பள்ளி மறுசுழற்சி பிரச்சாரம் 2.0” எனும் கருப்பொருளில் ஒரே நேரத்தில் 100,000 க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளைச் சேகரித்து, மறுசுழற்சி செய்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஆக்கப்பூர்வமான நிகழ்வு கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள 20 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 30,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்டாலிங் ஜெயாவிலுள்ள யுக் சாய் சீன ஆரம்பப்பள்ளியில் (SJK (C) Yuk Chai) நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், சிலாங்கூர் மாநில கல்வித் துறையின் (JPN Selangor) துணை இயக்குநர் என். யூசைனி பின் சாலே, மலேசியா பானாசோனிக் நிர்வாக இயக்குநர் திரு. கெய்சுகே நிஷிடா உட்பட பிற பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
மலேசியா உட்பட உலகம் முழுவதும் நிலையான கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்லவும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுமிக்க கலாச்சாரத்தை வளர்க்கவும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை மற்றும் பொதுமக்களுடன் கைகோர்த்து பணியாற்றுவதற்கு பானாசோனிக் உறுதிபூண்டுள்ளது என்று மலேசிய பானாசோனிக் நிர்வாக இயக்குனர் தமதுரையில் கூறியுள்ளார்.