
பாங்கி, ஜூன் 5 – இன்று அதிகாலையில், பாண்டார் பாரு பாங்கி செக்க்ஷன் 13இல், 44 வெளிநாட்டு தொழிலாளர்களை ஏற்றி வந்த பஸ், கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்ததால், அதில் 33 தொழிலாளர்கள் சொற்ப காயங்களுக்கு ஆளாகியனர்.
மேலும் அதில் பயணித்த 11 தொழிலாளர்கள், எந்தவொரு காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளதாக தீயணைப்பு துறையின் தலைமை கொமாண்டர் ரஹமத் சபாருதீன் கூறியுள்ளார்
காயம் அடைந்த அனைவரும், செர்டாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.