
ஜோர்ஜ்டவுன், மே-23 – மற்ற மாநிலங்களைப் பின் பற்றி பினாங்கிலும் வேப் அல்லது மின்னியல் சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும்.
பக்காத்தான் ஹாராப்பானைச் சேர்ந்த பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.குமரசேன் அதனை வலியுறுத்தினார்.
இளையோர் முதல் பெரியோர் வரையில் இந்த வேப் பயன்பாடு கெடுதலை ஏற்படுத்துகிறது; எனவே, அதனைத் தடுக்க கொள்கை மற்றும் சட்டரீதியாக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை கெடா, ஜோகூர், திராங்கானு ஆகிய மாநில அரசுகள், வேப் விற்பனைக்கான உரிமங்களைப் புதுப்பிப்பதில்லை என்ற அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளன.
எனவே, பினாங்கு அரசும் ஒரு திடமான முடிவை எடுக்க வேண்டுமென, மாநில சட்டமன்றத்தில் பேசிய போது குமரேசன் சொன்னார்.
பினாங்கில் வேப் விற்பனையைத் தடைச் செய்யும் பரிந்துரை தொடர்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டிருப்பதாகவும், விரைவில் மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் அதனறிக்கை தாக்கல் செய்யப்படுமென்றும், இளையோர், விளையாட்டு மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டேனியல் கூய் சி சென் முன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.