
ஜோர்ஜ்டவுன், மார்ச்-2 – பினாங்கு பாலத்தின் 7.5-ஆவது கிலோ மீட்டரில் இன்று காலை கார் கட்டுப்பாட்டை இழந்து குப்புறக் கவிழ்ந்தது.
தீவிலிருந்து பெருநிலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார், சாலைத் தடுப்பை மோதியதில், 10-க்கும் மேற்பட்ட தடுப்பு கம்புகளும் தூக்கி எறியப்பட்டன.
காலை 7.30 மணிக்கு ஏற்பட்ட அவ்விபத்தால் பினாங்கு பாலத்தில் 2 மணி நேரங்களுக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எனினும் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதா என இதுவரை தகவல் இல்லை.