
நீலாய், ஜனவரி-20 – நெகிரி செம்பிலான், பண்டார் பாரு நீலாயில் pickup லாரிக் கதவின் வெளிப்புறத்தில் 6 வயது சிறுவன் தொங்கிக் கொண்டே சென்ற வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு 9.45 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்ததாக, நீலாய் போலீஸ் தலைவர் Abdul Malik Hasim தெரிவித்தார்.
27 வினாடி வீடியோ X தளத்தில் வைரலானதை அடுத்து, அந்த pickup லாரி ஓட்டுநர் அடையாளம் காணப்பட்டு கைதுச் செய்யப்பட்டார்.
ஒரு விளையாட்டாக மகன் கேட்டதால் கார் கதவில் தொங்க தாம் அனுமதித்ததாக, வெளிநாட்டைச் சேர்ந்த 38 வயது அவ்வாடவர் விசாரணையில் கூறியுள்ளார்.
தான் வாகனமோட்டும் போதெல்லாம், அவ்வாறு கார் கதவில் தொங்க மகன் கேட்பது வழக்கமென்றார் அவர்.
அச்சம்பவம் சாலைப் போக்குவரத்துத் துறை சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.