
ஜோகூர் பாரு, மே-24 – பி.கே.ஆர் கட்சியின் MPP எனப்படும் 20 மத்தியத் தலைமைத்துவ மன்ற உறுப்பினர்களுக்கானத் தேர்தலில், தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் முதலாவதாக வந்தார். உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடாமல் MPP உறுப்பினருக்கு மட்டுமே போட்டியிடுவதாக அறிவித்த போதே, ஃபாஹ்மியின் வெற்றி உறுதியானதாகக் கூறப்பட்டது. அமைச்சராகவும் ஒற்றுமை அரசாங்கப் பேச்சாளராகவும் சிறந்த முறையில் அவர் செயலாற்றி வருவதே அதற்குக் காரணம். இந்நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே அதிக வாக்குகளுடன் அவர் வெற்றிப் பெற்றுள்ளார்.
வளர்ந்து வரும் மற்றோர் இளம் தலைவரான இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் அடாம் அட்லி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ், பினாங்கு பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் A. குமரேசன், G. சிவமலர் ஆகிய 3 இந்தியத் தலைவர்களும் MPP மன்றத்திற்குத் தேர்வாகியுள்ளனர்.