
கோலாலம்பூர், ஜூன் 24 – நேற்று, கூட்டாட்சி பிரதேச இஸ்லாமிய மதத் துறையுடன் (JAWI) இணைந்து கோலாலும்பூர் ஊராட்சி மன்றம் (DBKL) மேற்கொண்ட பரிசோதனையில் புக்கிட் செராசிலுள்ள ஜாலான் செமரா பாடி மற்றும் ஜாலான் குவாரியைச் சுற்றியுள்ள உரிமம் பெறாத நான்கு கோழி இறைச்சிக் கூடங்களை உடனடியாக மூட DBKL உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூய்மை, கழிவு கையாளுதல் மற்றும் உரிம மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்று DBKL இன் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் மூத்த துணை இயக்குநர் டாக்டர் நோர் ஹலிசாம் இஸ்மாயில் கூறியுள்ளார்.
ஹலால் சான்றிதழ் இல்லாமல் கோழி வணிகம் செய்தல், அழுக்கு வளாகங்களைக் கொண்டிருத்தல் மற்றும் கழிவுகளை நேரடியாக வடிகால் மற்றும் மழைக்கால வடிகால்களில் கொட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் எட்டு சம்மன்களும் வழங்கப்பட்டுள்ளன.
கூடுதலாக, தடுப்பூசி, உணவு கையாளுதல், எண்ணெய் பொறிகள் மற்றும் கழிவு வடிகட்டிகளை பராமரித்தல் ஆகியவற்றுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறியதற்காக அனைத்து வளாகங்களும் நடவடிக்கைக்கு உட்பட்டவை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.