Latestமலேசியா

அடுத்த வீட்டில் வண்ணச்சாயம் வீசியடித்த, மூவருக்கு ஓராண்டு சிறை

கோலாலம்பூர், மே 28 – கடந்த மார்ச் மாதம், பிரிக்ஃபீல்ட்ஸ் குடியிருப்பு பகுதியிலிருக்கும் வீடொன்றில், வேண்டுமென்றே வண்ணச்சாயம் வீசியடித்த மூவருக்கு நீதிமன்றம் 12 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

குற்றச்சாட்டின்படி, 34 வயதான சின் ஜி பிங் மற்றும் தியூ பூன் சௌவுடன் இணைந்து 38 வயதான ஓய் ஹாங் லியோங் ஆகியோர் வேண்டுமென்றே வண்ணச்சாயம் வீசியதோடு மட்டுமல்லாமல், ‘ஆக்சியா’ கார் மற்றும் ‘யமஹா’ மோட்டார் சைக்கிளை 10,000 ரிங்கிட் மதிப்புள்ள சேதத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்திய அம்மூவரின் செயலைக் கண்டித்து, அவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர், அவர்களின் தண்டனை காலத்தை குறைக்க கோரியும், நீதிமன்றம் அதனை நிராகரித்து ஓராண்டு கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!