Latestஉலகம்

புக்கேட்டில் கடற்கரை மசாஜ் செய்தபின் சிங்கப்பூர் ஆடவர் மரணம்

கோலாலம்பூர். டிச 9 – தாய்லாந்தில் புக்கெட், Kathu மாவட்டத்திலுள்ள Patong கடற்கரையில் உடல் மசாஜ் செய்த பின் சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் திடீர் மரணம் அடைந்தார். சனிக்கிழமையன்று இரவு 11 மணியளவில் சிங்கப்பூர் சுற்றுப்பயணி ஒருவர் மரணம் அடைந்தது குறித்து மசாஜ் நிலையம் புகார் செய்துள்ளது என Patong போலீஸ் தலைவர் Cor Chalermchai Hernsawad தெரிவித்தாக Bangkol Post தகவல் வெளியிட்டது.

52 வயதுடைய அந்த ஆடவர் 45 நிமிடம் உடலில் எண்ணெய் மசாஜ் செய்த பின் தளர்ந்த நிலையில் இருந்ததாகவும் அதன் பின் அவரது சுவாசம் நின்றுவிட்டதாக கூறப்பட்டது. அந்த ஆடவர் மீண்டும் சுவாசிப்பதற்கு உதவும் பொருட்டு அவருக்கு மசாஜ் நிலைய அதிகாரி CPR முதலுதவி நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் அவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்பவில்லை . இறந்த நபருக்கு சவ பரிசோதனை மேற்கொள்வதற்கு அவரது மனைவி மறுத்துவிட்டதோடு அவரது உடலை சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல விரும்பியதாக Cor chalermchai Hernsawad கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!