Latest

ஜோகூரில் ஏக காலத்தில் Ops Noda Khas அதிரடிச் சோதனை; 84 பேர் கைது

ஜோகூர் பாரு, மே-16 -ஜோகூரில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட Ops Noda Khas சோதனை நடவடிக்கையில், பல்வேறு குற்றங்களுக்காக 84 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் அதனை உறுதிப்படுத்தினார்.

விபச்சார நடவடிக்கைகளைத் துடைத்தொழிப்பது, சமூகப் பயண அட்டைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது, முறையான ஆவணங்கள் இன்றி அந்நியப் பெண்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைகக் களைவதே அச்சோதனையின் நோக்கமாகும்.

கராவோக்கே மையங்கள், கேளிக்கை நிலையங்கள், அழகுப் பராமரிப்பு மற்றும் ஆரோக்கிய மையங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், உடம்புபிடி மையங்கள் போன்ற இடங்கள் அதில் குறி வைக்கப்பட்டன.

கைதான 84 பேரில் 15 உள்ளுர் ஆடவர்களும் 2 பெண்களும் அடங்குவர்.

அவர்கள் மலேசியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழும், 67 வெளிநாட்டவர்கள் குடிநுழைவுச் சட்டத்தின் கீழும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டனர்.

கைப்பேசிகள், கட்டண இரசீதுகள், ஒலிப்பெருக்கிகள், தொலைக்காட்சி பெட்டிகள், உடம்பிடி தைலம், ஆணுறைகள், 8,553 ரிங்கிட் ரொக்கம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!