
மெந்தகாப், மே-25 – பஹாங், மெந்தகாப், கல் குவாரி காளியம்மன் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடந்தேறியது.
மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் சிறப்பு வருகைப் புரிந்தார்.
திருவிழாவின் ஒரு பகுதியாக SPM தேர்வில் சிறந்தத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிகளுக்கு பல்வேறு நல்லெண்ண உதவிகளை வழங்கி வரும் Persatuan Pembangunan Putra Wawasan Tiram Pahang சங்கம் அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
SPM மாணவர்களுக்கு திருவிழா காலத்தில் அவர்கள் சிறப்பு செய்வது இதுவே முதன் முறையாகும்.
அவ்வகையில் பஹாங் முழுவதும் குறைந்தது 5 A-களைப் பெற்ற 35 இந்திய மாணவர்களுக்கு தலா 200 ரிங்கிட் ஊக்கத் தொகையும் அங்கீகார விருதும் வழங்கப்பட்டது.
கோலாம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலருமான டத்தோ சிவகுமார் அவற்றை எடுத்து வழங்கினார்.
இவ்வேளையில் SPM மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டது இவ்வாண்டு திருவிழாவை மேலும் மெருகூட்டியதாக, ஆலயத் தலைவர் சுதாகரன் தெரிவித்தார்.
ஊக்கத் தொகை பெற்ற மாணவர்கள் சிலர் வணக்கம் மலேசியாவுடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
அந்நிகழ்வில் சிறப்பம்சமாக, அச்சங்கத்தின் முயற்சியில் கல் குவாரி காளியம்மன் ஆலயத்தின் வரலாறு AI வீடியோவாக காண்பிக்கப்பட்டது.
விழாவில் சிறப்புரையாற்றிய டத்தோ சிவகுமார், மலைக் குகையைக் காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ள பஞ்சிங் சிவன் ஆலயம் குறித்தும் கருத்துரைத்தார்.
SPM மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டு விஷயத்தில் கல்வி அமைச்சு வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.