
பெங்களூரு, ஏப்ரல்-21- தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்தில், நிறுத்தப்பட்டிருந்த IndiGo விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
வெள்ளிக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது இயந்திரக் கோளாறைப் பழுதுபார்ப்பதற்காக அவ்விமானம் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது ஊழியர்களை இறக்கிவிடுவதற்காக வந்த டெம்போ வாகனம், எதிர்பாரா விதமாக விமானத்தை மோதியது.
இதில் டெம்போ வாகனத்தின் மேல் பகுதி சேதமடைந்ததில் அதன் ஓட்டுநருக்கும் சிராய்ப்புக் காயமேற்பட்டது.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட IndiGo விமான நிறுவனம், டெம்போ ஓட்டுநரின் கவனக்குறைவே அவ்விபத்துக்குக் காரணம் என்றது.
மேற்கொண்டு விசாரணைகள் நடைபெறுவதாகவும் அது கூறியது.