பெட்டாலிங் ஜெயாவில் 78 வயது ஆடவர் தவறான கியரை இயக்கியதால் கார் வங்கியில் மோதியது

கோலாலம்பூர், ஜூன் 24 – பெட்டாலிங் ஜெயா, ஜாலான் 21/11A,
செக்சன் 21 இல் உள்ள ஒரு வங்கியில் 78 வயது முதியவர் ஒருவர் தவறுதலாக தவறான கியரை இயக்கி, தனது காரை ஒரு வங்கியில் மோதியுள்ளார். நேற்று மாலை மூன்று மணியளவில் , அந்த நபர் தனது வங்கிப் பணிகளை முடித்த சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பெட்டாலிங் ஜெய மாவட்ட போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் ஷாருல்னிசாம் ஜாபர் ( Sharulnizam Ja’afar) தெரிவித்தார்.
ஓட்டுநர் தற்செயலாக தவறான கியரை மாற்றியதால், கார் முன்னோக்கிச் சென்று வங்கியின் கண்ணாடிச் சுவரில் மோதியது.
இச்சம்பவத்தில் எவரும் எவருக்கும் காயம் ஏற்படவில்ல. ஆனால் காரும் வங்கி வளாகமும் சேதமடைந்தன. விபத்துகளைத் தவிர்க்க அனைத்து சாலைப் பயனர்களும் எப்போதும் போக்குவரத்துச் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று Sharulnizam நினைவுறுத்தினார். மேலும் பொறுப்பற்ற வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக போலீஸ்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.