
ஜூன்-29 – நேற்றிரவு பெர்ஹெந்தியான் தீவில், சுற்றுலாப் படகொன்று நீரில் கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார் என்றும் .பெசுட் மாவட்ட காவல்துறைத் தலைவர், அசமுதீன் அகமது அபு தெரிவித்துள்ளார்.
இரவு 10.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 3 வயது சிறுமி சர்விஹ்கா ஆறுமுகம், 40 வயதுடைய ஆறுமுகம் சதிவேலோ மற்றும் 10 வயதுடைய வெண்பாணி விஜய ராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்..
இந்நிலையில் 6 வயதுடைய சக்திவேல் தமிழ் செல்வன், என்பவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என்று அறியப்படுகின்றது.
சம்பவம் நடந்த நேரத்தில், படகில் ஏறிய 15 பேரும் பெர்ஹெந்தியான் கெசில் தீவு ஜெட்டியிலிருந்து, பெர்ஹெந்தியான் பெசார் தீவில் தங்கியிருந்த ரிசார்ட்டுக்குச் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முதலில் மோசமான வானிலை மற்றும் பெரிய அலைகளால் படகு தாக்கப்பட்டு கவிழ்ந்ததாக தகவல் வெளிவந்துள்ள அதே வேளை போலீசார் மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில் படகு ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டிலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக பெசுட் மாவட்ட காவல் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில்அசமுதீன் விளக்கியுள்ளார்.