
மும்பை , ஜூன் 10 – தாய்லாந்திலிருந்து வந்த ஒரு பயணியிடமிருந்து, பல்லிகள், சூரியப் பறவைகள் மற்றும் மரம் Possums எனப்படும் மரம் ஏறும் ஒருவகை அரிய அணில்கள் உட்பட கிட்டத்தட்ட 100 உயிரினங்களை இந்திய சுங்க அதிகாரிகள் அண்மையில் குறிப்பிடத்தக்க முறையில் பறிமுதல் செய்ததாக அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது. டரான்டுலா எனப்படும் இரண்டு பெருஞ்சிலந்திகள் மற்றும் ஆமைகளையும் சுமந்து வந்த பயணி, மும்பை விமான நிலையம் வந்தடைந்தபோது பதட்டத்தின் அறிகுறிகள் தென்பட்டதால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூன் மாத தொடக்கத்தில் தாய்லாந்திலிருந்து வந்த டஜன் கணக்கான விஷ விரியன் பாம்புகளை கடத்தும் ஒரு பயணி தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து இந்த பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட வனவிலங்குகளில் ஓனான்கள் , ஆமைகள் , மெக்சிகோவின் மழைக்காடுகளில் இருந்துவரும் தேன் கரடி, ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஆறு “சர்க்கரை கிளைடர்கள்”, போசம் ஆகியவையும் அடங்கும். சுங்கப் பிரிவு வெளியிட்ட புகைப்படங்களில் ஆறு சர்க்கரை கிளைடர்கள் ஒரு கூடையில் இருந்ததோடு இந்திய நாட்டவரை தடுத்து நிறுத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட பல விலங்குகளில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்டவவையும் அடங்கும் என நிதி அமைச்சு வெளியிட் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 3½ ஆண்டுகளில் தாய்லாந்திலிருந்து இந்தியா வந்தடையும் விமானங்களில் இறந்த மற்றும் உயிருடன் 7,000க்கும் மேற்பட்ட வன விலங்குகள் மற்றும் ஊர்வனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.