Latestமலேசியா

போப்பாண்டவர் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு; மலேசிய அரசாங்கத்தை பிரதிநிதித்து அஸாலினா, எவோன் பெனடிக் கலந்துகொள்வர்

கோலாலம்பூர், ஏப் 25 – நாளை Vatican நகரில் நடைபெறும மறைந்த போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கில் பிரதமர் துறையின் சட்டம் , அமைப்புகளுக்கான சீரமைப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒத்மான் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக் ஆகியோர் மலேசிய அரசாங்கத்தை பிரதிநிதித்து கலந்துகொளவார்கள். வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையொன்றில் இத்தகவலை வெளியிடப்பட்டது.

போப்பாண்டவரின் இறுதிச் சடங்கு கர்டினல் Givona Battista Re தலைமையில் Vatican city யிலுள்ள சென்ட் பீட்டர் சதுக்கத்தில் ரோமன் கத்தோலிக்க சடங்கின்படி சடங்கு நடைபெறும். பின்னர், போப்பாண்டவர் பிரான்சிஸின் நல்லுடல் Basilika Santa Maria Manggiore ரிக்கு ஊர்வலமாக கொண்டுச் செல்லப்படும். அதன் பின் அங்கு நடைபெறும் ஒரு தனிப்பட்ட சடங்கில் போப்பாண்டவரின் நல்லுடல் அடக்கம் செய்யப்படும். ஏப்ரல் 21 ஆம் தேதி போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைந்ததைத் தொடர்ந்து அவருக்கு இதற்கு முன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கலை தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!