
ரந்தாவ் பாஞ்சாங், ஜூலை -6 – கிளந்தான் , ரந்தாவ் பாஞ்சாங்கில் பெண்களின் போலி கைப்பைகளை விற்று வந்த கடையைச் சோதனையிட்டதில், KPDN எனப்படும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு ஒரு பெண்ணைக் கைதுச் செய்தது.
நேற்று காலை 10 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட அந்நடவடிக்கையில் 2,280 ரிங்கிட் மதிப்பிலான 114 கைப்பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
டிக் டோக் நேரலையில் விற்பதற்காக அக்கடைப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக, கிளந்தான் KPDN இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.
வர்த்தக நோக்கத்திற்காக பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரையை, அனுமதியில்லாமல் வைத்திருந்தது மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக, 2019 வர்த்தக முத்திரைச் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
போலி வர்த்தக முத்திரைப் பொருட்களை விற்கும் தரப்பினர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்பதை எச்சரிப்பதாக அஸ்மான் கூறினார்.