
கோலா திரெங்கானு, மே 24 – கடந்த பிப்ரவரி மாதம், சமூக ஊடகத்தில் பரவிய போலி பங்குச் சந்தை விளம்பரத்தை நம்பி முதலீடு செய்த நிதி ஆய்வாளர் பணியிலிருக்கும் நபர் ஒருவர், 147,350 ரிங்கிட்டை இழந்துள்ளதாக கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர், அஸ்லி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.
42 வயது நிரம்பிய அப்பெண், வலைத்தளத்தில் காணப்பட்ட இணைப்பைச் சொடுக்கியவுடன் 100க்கும் மேற்பட்டோர் இருக்கும் புலன குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பங்குச் சந்தைகளை வாங்குவதற்கு, அப்போலி கும்பல் கொடுத்த வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு 147, 350 ரிங்கிட் பணத்தைச் செலுத்திய பின், அப்பெண்ணுக்கு எந்தவித இலாபமும் கிடைக்கப்பெறாததை அடுத்து காவல்துறையினரிடம் அவர் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில், தொடரப்பட்ட இவ்வழக்கு, மோசடி சட்டத்தின் கீழ் தீர விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.