
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-1- தனது ஆறு வயது மகனை நெகிரி செம்பிலான் Jempolலில் ஜூலை 28ஆம் தேதி கொலை செய்து புதைத்ததாக சந்தேகிக்கப்படும் 36 வயது ஆடவருக்கு ஆகஸ்டு 7ஆம் தேதிவரை தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த ஆடவரை தடுத்து வைப்பதற்கான உத்தரவை Bahau மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்ததாக Jempol போலீஸ் தலைவர் Norhisham Mustapar தெரிவித்தார்.
அந்த சந்தேகப் பேர்வழிக்கு எதிராக ஜோகூர் பாருவில் பெறப்பட்ட தடுத்து வைக்கும் உத்தரவு முடிவுற்றதைத் தொடர்ந்து அந்நபர் நேற்று Jempol போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஒரு நாளுக்கு முன்னதாக ஜோகூர் புக்கிட் இண்டாவில் தனது மகன் காணாமல்போனதாக கூறி ஜூலை 24 ஆம்தேதி அந்த சந்தேகப்பேர்வழி போலீசில் புகார் செய்திருந்தார்.
மகனை தனியாக காரில் அமரச்செய்துவிட்டு அருகேயுள்ள உணவகத்தில் உணவு வாங்கிவிட்டு திரும்பிவந்தபோது அவன் காணவில்லையென அந்த நபர் கூறிக்கொண்டார்.