
மலாக்கா – ஜூன்-13 – வருடாந்திர Nikkei மாநாட்டில் பங்கேற்பதற்காக துன் Dr மகாதீர் மொஹமட் கடந்த மாதம் ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணத்திற்கு, அரசாங்கம் சுமார் அரை மில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை உறுதிப்படுத்தினார். மகாதீரிடமிருந்து முறைப்படி விண்ணப்பம் கிடைத்து, அரசாங்கம் 486,000 ரிங்கிட்டை அங்கீகரித்ததாக அன்வார் சொன்னார்.
அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு அரசாங்கத்திடம் நிதி ஆதரவுக் கோர முன்னாள் பிரதமர்களுக்கு சட்டத்தில் சலுகை இருப்பதை அன்வார் சுட்டிக் காட்டினார்.
அந்த விண்ணப்பங்களுக்கு நடப்பு பிரதமர் பச்சைக் கொடி காட்டும் பட்சத்தில் அரசாங்கம் அவற்றை அங்கீகரிக்கும் என்றார் அவர். எனவே இதை யாரும் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது.
என்னதான் மகாதீர் அனுதினமும் அரசாங்கத்தைக் குறைக்கூறினாலும் அவாரின் விண்ணப்பித்தை தாம் அங்கீகரித்தாக டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
மலாக்காவில் கருத்தரங்கு மற்றும் பி.கே.ஆர் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
வருடாந்திர நிகழ்வான Nikkei மாநாட்டில் கடந்த மே 30-ஆம் தேதி மகாதீர் பங்கேற்று உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. அம்மாநாடு தொடங்கியது முதல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அவர் அதில் பங்கேற்று வருகிறார்.