Latestமலேசியா

மருந்து விலையை காட்சிக்கு வைக்கும் அமலாக்கத்தில் 3 மாதத்திற்கு குற்றப் பதிவு கிடையாது – மலேசியா சுகாதார அமைச்சு

புத்ரா ஜெயா , மே 2 – மே 1ஆம் தேதி முதல் 2025 ஆம் ஆண்டின் விலைக் கட்டுப்பாடு மற்றும் மருந்து விலை நிர்ணயம் ஆணையத்தின் கீழ் மருந்துகளை காட்சிக்கு வைக்கத் தவறும் கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு எதிராக மலேசிய சுகாதார அமைச்சு மூன்று மாத காலத்திற்கு சம்மன்களுக்கான எந்தவொரு குற்றப்பதிவையும் வழங்காது.

இந்த காலக்கெடு முடிவுற்ற பின் மருந்துகளை காட்சிக்கு வைக்கும் நடவடிக்கையை அமல்படுத்தத் தவறினால் சம்மன் விநியோகிக்கப்படும் என மருந்தக சேவைக்கான சுகாதார துணை தலைமை இயக்குநர் டாக்டர் அசுவானா ரம்லி ( Azuana Ramli ) தெரிவித்தார்.

இந்த மூன்று மாதத்திற்கு ஆலோசனை அடிப்படையில் எங்களது அமலாக்கம் இருக்கும். இந்த உத்தரவை அமல்படுத்துவது தொடர்பான பல்வேறு அம்சங்களை அறிந்துகொள்ளும் வகையில் எங்களது ஆலோசனைகள் தெரிவிக்கப்படும்.

அந்த கால அவகாசம் முடிந்த பின்னர் இந்த உத்தரவை அமல்படுத்தத் தவறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர் Azuana கூறினார்.

இதனிடையே விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்பு ஆணையை செயல்படுத்துவதில் மருந்து விலைகளில் எந்தவிதமான பிரச்னையும் இருக்காது என உள்நாட்டு வர்த்க மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் அமலாக்க தலமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் கூறினார்.

ம் நாட்டில் இந்தத் துறை முதிர்ச்சியடைந்திருப்பதோடு , தொழில்முறை ரீதியாகவும் இருப்பதாக தாம் உறுதியாக நம்புவதால் மருந்து விலைகளை கையாள்வது தொடர்பான சிக்கல்கள் இருப்பது சாத்தியமில்லை என்றும் அவர் விளக்கினார்.

மருந்தகங்கள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் வழங்கும் மருந்துகளின் விலைகளை நாங்கள் தடை செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ திட்டமிடவில்லை என்று அஸ்மான் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!