
கோலாலம்பூர், ஜூன் 24- ஜோகூர் பாரு, ஜாலான் துன் ரசாக்கில் ஞாயிற்றுக்கிழமை , மெதுவாக ஓட்டிச் சென்ற சாலைப் பயனரின் புரோடுவா Axia காரை மூன்று முறை மோதியதைத் தொடர்ந்து , 50 வயதுடைய உள்நாட்டு ஆடவரை போலீசார் கைது செய்தனர்.
பிற்பகல் 3.10 மணியளவில், துரோகச் செயல்கள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக, சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடக்கியுள்னர் என தென் ஜோகூர்பாரு மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ரவ்ப் செலாமாட் (Raub Selmat ) தெரிவித்தார்.
முன்னதாக, நான்கு சக்கர வாகனமான Toyota Hilux ஒன்று பெரோடுவா காரை பல முறை பின் நோக்கி வேகமாக ஓட்டி செல்வதைக் காட்டும் 19 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
இதற்கிடையில், சந்தேக நபருக்கு ஏழு குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்து.
அந்த நபர் இன்று ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கூடுதல் விசாரணைக்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 117 இன் கீழ் தடுப்புக் காவல் விண்ணப்பத்திற்காக கொண்டு வரப்படுவார் என Raub கூறினார்.
இந்த விவகாரம் தண்டனைச் சட்டத்தின் 427ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது, இது தொடர்பான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் சந்தேக பேர்வழிக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்கிறது.