
செந்தூல் HGH கொன்வென்ஷன் சென்டரில், ‘யாசி’, மலேசிய இந்திய கலைஞர்கள் அறவாரிய விருது விழா 2025, மிகச்சிறப்பாக நடந்தேறியது.
மண்ணின் மைந்தர்களை ஊக்குவிக்கும் இவ்விழாவில் ம.இ.கா தேசியத் துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமையில் மொத்தம் 48 கலைஞர்கள் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டனர் .
இதில், முன்னாள் RTM செய்தி வாசிப்பாளர் ஹாசான் காணி அவர்களுக்கு உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அதே நிலையில்,MGR விஜயசேகர், இயக்குனர் Allabas Karim, சத்தியா, Master Appu, ஓவியர் டாக்டர் சந்திரன், TMS சிவகாந்தன், இயக்குனர் தேவராணி, ‘Nattuva Thilagam’ Dr. Indrani மற்றும் டத்தோ சுசீலா மேனன் ஆகியவர்களுக்கும் துன் சாமிவேலுவின் கலைச்செம்மல் விருத்தளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நகைச்சுவை நடிகர் விருது SPM செல்வரத்தினம் அவருக்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது திரு. நல்லதம்பி அவருக்கும், சிறந்த திரை மற்றும் மேடை நடிகர் விருது KS மணியம் அவருக்கும், சிறந்த Saxophone கலைஞர் விருது பினாங்கு ஜெயராமன் ராஜு அவருக்கும் மற்றும் சிறந்த விசைப்பலகை கலைஞர் விருது திரு. ரத்னகுமார் அவருக்கும் வழங்கப்பட்டுருந்தது.
நாளுக்கு நாள் கலையுலகம் வளர்ந்துக் கொண்டே இருக்கும் நிலையில், நம் நாட்டு கலைஞர்களும் உலகளவில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கு ஊக்குவிப்பும் ஆதரவும் முக்கியம்.
அந்த நோக்கத்தோடு சில ஆண்டுகள் இடைவெளியோடு நடத்தப்பட்டிருக்கும் இந்த யாசி விருதளிப்பு விழா வரவேற்கத்தக்க ஒன்று.