
ரவாங், ஜூன்-10 – சிலாங்கூர், ரவாங் அருகே PLUS நெடுஞ்சாலையில் தான் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், காருடன் மோதி விபத்துக்குள்ளானதில், 15 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து பாகிஸ்தானியர் காயமடைந்தார்.
இன்று காலை 8 மணிக்கு மேல் அவ்விபத்து நிகழ்ந்ததாக ரவாங் தீயணைப்பு- மீட்புத் துறை கூறியது.
Honda Dash மோட்டார் சைக்கிளோடு விழுந்த அவ்வாடவருக்கு கால் எலும்பு முறிந்தது; முதுகெலும்பிலும் முகத்திலும் காயம் ஏற்பட்டன.
தீயணைப்பு – மீட்புக் குழுவினர் 5 நிமிடங்களுக்குள் அவ்வாடவரை stretcher மூலம் மேலே கொண்டு வந்து, சிகிச்சைக்காக மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்தனர்.
மோட்டார் சைக்கிளை மோதிய காருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.