Latestமலேசியா

லஷ்கர் பயங்கரவாதி சைஃபுல்லா காலிட் கொலை; சவப்பெட்டிக்கு பாகிஸ்தான் கோடி போர்த்தப்பட்டு மரியாதை

இஸ்லாமாபாத், மே-20 – இந்தியாவால் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதி அபு சைஃபுல்லா காலிட், பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிந்து மாநிலத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரைக் சுட்டுக் கொன்றனர்.

பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பாஅமைப்பின் தலைவராக இருந்த சைஃபுல்லா, 2005-ஆம் ஆண்டு பெங்களூருவில் இந்திய அறிவியல் மாநாடு தாக்குதல், 2006-ரில் நாக்பூரில் RSS தலைமையகம் மீதான தாக்குதல், மற்றும் 2008-ல் காஷ்மீர் ராம்பூரில் CRPF தலைமையகத்தில் நடந்த தாக்குதல்களின் பின்னணியில் இருந்து செயல்பட்டவராவார்.

இதையடுத்து தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இந்தியா அவரை தீவிரமாகத் தேடி வந்தது.

ஆனால், சைஃபுல்லாவோ, நேப்பாளத்தில் வினோத்குமார் என பெயரை மாற்றிக் கொண்டு அங்கேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

பிறகு, தனது நிலைமை சுமூகமானதும் பாகிஸ்தான் திரும்பி சிந்து நகரில் வசித்து வந்தவர் தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவ்வேளையில், சைஃபுல்லாவின் நல்லடக்கச் சடங்கில் அவரின் சவப்பெட்டிக்கு பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்ட வீடியோக்கள் வைரலாகியுள்ளன.

பயங்கவராதிகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என அடிக்கடி கூறி வரும் பாகிஸ்தானில் தான் பயங்கரவாதிகளுக்கு VIP மரியாதை கொடுக்கப்படுகிறது.

இப்படி நடப்பது இது முதன் முறையுமல்ல.

அண்மைய இந்திய இராணுவத்தின் தாக்குலில் கொல்லப்பட்ட பயங்கவாதிகளுக்கும் இந்த ‘ராஜ’ மரியாதை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக அல்ல, நேரடியாகவே பாகிஸ்தான் உதவி வருவது இதன் மூலம் நிரூபணமாவதாக இந்திய ஊடகங்கள் கடுமையாக சாடியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!