Latestமலேசியா

வளர்ப்பு மகள் சித்ரவதை; 54 வயது இல்லத்தரசி கைது

குவாலா சிலாங்கூர், ஜூன்-30 – குவாலா சிலாங்கூர், தாமான் ஸ்ரீ பெண்டாஹாராவில் தனது வளர்ப்புப் பிள்ளையை சித்ரவதை செய்து, முறையாகப் பராமரிக்கத் தவறிய ஓர் இல்லத்தரசி கைதாகியுள்ளார்.

அச்சம்பவம் குறித்து சனிக்கிழமை மாலை போலீஸுக்குத் தகவல் கிடைத்ததாக, குவாலா சிலாங்கூர் போலீஸ் தலைவர் அசாஹாருடின் தாஜுடின் தெரிவித்தார்.

13 வயது அந்த பெண் பிள்ளையை, குழந்தையிலிருந்தே அம்மாதுவும் அவரது கணவரும் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவே 54 வயது அம்மாது கைதுச் செய்யப்பட்டார்.

விசாரணைக்காக ஜூலை 4 வரை அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வேளையில் சித்ரவதைக்கு ஆளான சிறுமி, சிகிச்சைக்காக தஞ்சோங் காராங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!