Latestமலேசியா

வழக்கு முடிந்தது: சாஹிட்டின் 47 ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மேல் நடவடிக்கை இல்லையென, AGC திட்டவட்டம்

புத்ராஜெயா, ஜனவரி-8 – துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி மீது முன்பு சுமத்தப்பட்ட 47 ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் மேல் நடவடிக்கை எடுக்கப்படாது.

தேசிய சட்டத் துறைத் தலைவர் அலுவலகமான AGC இன்று அதனை உறுதிப்படுத்தியது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC நடத்திய விரிவான விசாரணைகள் மற்றும் சாஹிட்டின் சட்ட பிரதிநிதிகள் சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, போதுமான ஆதாரங்கள் இல்லை என சட்டத்துறை முடிவுச் செய்துள்ளது.

இதனாலேயே வழக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது என AGC விளக்கியது.

Yayasan Akalbudi அறக்கட்டளைத் தொடர்பில் சாஹிட் மீது தொடரப்பட்ட அவ்வழக்கில், 2023 செப்டம்பரில் DNAA முறையில் நீதிமன்றம் அவரை விடுவித்தது.

DNAA என்பது குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுதலை அளிப்பதல்ல; போதிய ஆதாரஙள் கிடைத்தால் வழக்கை மீண்டும் தொடர முடியும் என்பதாகும்.

இந்நிலையில், AGC-யின் இன்றைய அறிவிப்புடன், சாஹிட் வழக்கு முற்றிலும் முடிவுக்கு வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!