Latestமலேசியா

வாடிக்கையாளர்கள் 3 நிமிடங்களுக்கு முன்பே நோன்பு துறந்தனர்; மக்ரிப் தொழுகைக்கான அழைப்பை தவறாக ஒலிபரப்பியதற்கு மன்னிப்புக் கோரிய உணவகம்

புன்ச்சாக் ஆலாம், மார்ச்-28- வாடிக்கையாளர்கள் 3 நிமிடங்களுக்கு முன்பே தங்களின் இரமலான் நோன்பைத் திறக்கும் அளவுக்கு, தவறுதலாக மக்ரிப் தொழுகையை ஒலிபரப்பியதற்காக, உள்ளூர் கோழிப் பொரியல் கடையான DarSA Fried Chicken-னின் புன்ச்சாக் ஆலாம் கிளை மன்னிப்புக் கோரியுள்ளது.

மார்ச் 17-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில் இரவு 7.26 மணிக்கே மக்ரிப் தொழுகைக்கான அழைப்பை ஒலிபரப்பி விட்டோம்; உண்மையில் அன்று நோன்பு திறக்கும் நேரம் இரவு 7.29 மணியாகும்.

இதனால் அவர்களின் அன்றைய நோன்பு செல்லாமல் போயிருக்கின்றது; எனவே பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தவறவிட்ட நோன்பு நாளை பின்பு ஈடுகட்டி விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இது எங்களால் நடந்த தவறு, அதற்கு வருந்துகிறோம்; தவற்றை சுட்டிக் காட்டிய வாடிக்கையாளர்களுக்கும் இவ்வேளையில் நன்றித் தெரிவித்துக் கொள்கிறோம் என DarSA அறிக்கையில் கூறியது.

“இனியும் இது போன்ற தவறுகள் நடக்கா வண்ணம், உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்; தொழுகை அழைப்பு ஒலியை JAKIM வெளியிட்ட நேர அட்டவணைக்குகேற்ப சரிசெய்துள்ளோம்.” என அவ்வறிக்கை மேலும் கூறியது.

அக்கடையின் தவற்றால், தங்களின் ஒரு நாள் நோன்பு வீணாகி விட்டதாக, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் முன்னதாக சமூக ஊடகங்களில் அதிருப்தியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!