Latestமலேசியா

விலைமாதர்கள் என நம்பப்படும் 8 வெளிநாட்டுப் பெண்கள் கைது

கோலாலம்பூர், ஜூன் 5 – புக்கிட் பிந்தாங்கில் மேற்கொள்ளப்பட்ட
Op Noda நடவடிக்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 பெண்கள் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட பகுதியில் நேற்றிரவு மணி 9.54 முதல் போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ
ருஸ்னி முகமட் இசா ( Rusdi Mohd Isa ) தெரிவித்தார்.

உகண்டா, நைஜீரியா மற்றும் செனகலைச் சேர்ந்த 22 முதல் 30 வயதுடைய பெண்கள் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளிநாட்டினரை தங்களது வாடிக்கையாளராக தேடுவதும் கண்டறியப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் ருஸ்டி தெரிவித்தார். அந்த விலைமாதர்கள் தங்களது சேவைக்கு 50 ரிங்கிட் முதல் 200 ரிங்கிட்வரை பெற்றதும் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!