
பெட்டாலிங் ஜெயா, மே 23 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA 1), வனத்துறை மற்றும் விமானப் பாதுகாப்புக் குழு (AVSEC) ஆகியவற்றுடன் இணைந்து மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (AKPS) மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விலங்குகளை வெளிநாட்டிற்குக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட 2 ஆண்கள் பிடிபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், வனவிலங்குகளை வெளியே எடுத்துச் செல்வதற்கான சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதை தொடர்ந்து அவர்கள் மேல் கட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கையில், 460,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள ‘இகுவானா’ போன்ற பல அறிய வகையான பறவைகளும் விலங்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சட்டப்பூர்வ அனுமதியின்றி வனவிலங்குகளை வைத்திருத்தலும் வர்த்தகம் செய்வதும் சட்டத்திற்கு எதிரான செயல் என்பது குறிப்பிடத்தக்கது.