Latestமலேசியா

ஜூலை 1 முதல், வாகன நுழைவு அனுமதி VEP அமலாக்கம் – அந்தோனி லோக்

புத்ராஜெயா, ஜூன் 4 — மலேசிய எல்லைகளுக்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கான நுழைவு அனுமதி, ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென்று போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் இன்று அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் இன்னும் பதிவுச் செய்யாத சிங்கப்பூர் வாகனமோட்டிகளுக்கு நினைவூட்டும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்திருக்கின்றது என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜூலை 1 முதல் தங்கள் வாகனங்களை, வாகன நுழைவு அனுமதி திட்டத்தில் (VEP) பதிவு செய்யாத அல்லது செயல்படுத்தாத வெளிநாட்டு வாகன உரிமையாளர்களுக்கு மலேசிய போக்குவரத்துத்துறை சம்மன் அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சூழலில், ​​மோட்டார் சைக்கிள்கள் VEP திட்டத்தில் பதிவு செய்யவதற்கான தேவை இல்லை என்றாலும், எதிர்காலத்தில் அரசாங்கம் அதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது என்று லோக் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!