
ஷா அலாம், மே 23 – ஷா அலாமைச் சுற்றியுள்ள வெடிப்பு போன்ற சத்தங்கள், குடியிருப்பாளர்களிடையே இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே இருப்பதால் இதற்கான காரணத்தை கண்டறியும்படி ஷா அலாம் மாநகர் மன்றத்திற்கு கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. அதோடு இப்பிரச்னையை சிலாங்கூர் மாநில அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டிருப்பதாக ஊராட்சி மன்றங்கள் மற்றும் சுற்றுலா மீதான குழுவுக்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ Ng Suee Lim தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் மூலம் தனது தரப்புக்கு இந்த விவகாரம் குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும், சத்தத்திற்கான மூலம் கண்டுப்பிடிக்கப்படும் என அவர் கூறினார்.
ஒருவேளை சத்தத்தின் காரணத்தை அடையாளம் காண போலீஸ் துறையுடன் அணுக்கமாக ஷா அலாம் மாநகர் மன்றம் பணியாற்றலாம். அந்த சத்தம் எங்கிருந்து வந்து அதற்கான காரணம் என்ன என்பதை கண்டறியும்படி தாம் ஷா அலாம் மாநகர் மன்றத்திற்கு கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து மக்கள் கவலைப்படவோ பதட்டப்படவோ மாட்டார்கள் என Ng Suee Lim கூறினார்.