Latestஉலகம்

பாகிஸ்தான் மீதான பதிலடித் தாக்குதலுக்கு இந்தியா ‘ ஆப்பரேஷன் சிந்தூர்’ என பெயர் வைக்கக் காரணம் என்ன?

புது டெல்லி, மே-7, ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள இராணுவ நடவடிக்கையே, இன்று உலகம் முழுவதும் பேச்சுப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில், அதற்கு “ஆப்பரேஷன் சிந்தூர்” என பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு தற்போது காரணம் தெரிய வந்துள்ளது.

“சிந்தூர்” என்பது ஹிந்தியில் திருமணத்திற்குப் பிறகு இந்து பெண்கள் நெற்றியில் அணியும் சிவப்பு குங்குமம் அல்லது பொடியைக் குறிக்கிறது.

ஏப்ரலில் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, பல பெண்களை விதவைகளாக்கியது.

தாக்குதலுக்குப் பிறகு கணவரின் உயிரற்ற உடலுக்கு அருகில் ஒரு பெண் படுத்திருக்கும் படம் வைரலாகி, தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த வலி மற்றும் மனவேதனையின் அடையாளமாக மாறியது.

இந்நிலையில், கணவர்களை இழந்த பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலேயே இதற்கு ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் இருவரும் இந்த இராணுவ நடவடிக்கையின் பெயரோடு X தளத்தில் சிவப்பு பொடியை சித்தரிக்கும் ஒரு படத்தை வெளியிட்டுள்ளனர்.

“உலகம் பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மையைக் காட்ட வேண்டும்,” என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதிவிட்டார்.

“இந்தியாவுக்கு வெற்றி” என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியில் எழுதியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!