
கோலாலம்பூர், டிச 5 – AKPS எனப்படும் மலேசிய எல்லை பாதுகாப்பு மற்றும்
கண்காணிப்பு நிறுவனம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாட்டின் ஒட்டுமொத்த
114 நுழைவு பகுதிகளின் நடவடிக்கைகளை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கும் AKPS சின் முன்னோடி செயல்பாட்டில் கிளந்தான் Rantau Panjang இல் உள்ள குடிநுழைவு , சுங்க. தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்துடன் 22 நுழைவு மையங்களை உள்ளடக்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் நாட்டின் அனைத்து 114 நுழைவு மையங்களின் செல்பாடுகளை AKPS எடுத்துக் கொள்ளவிருப்பதால் நாங்கள் இன்னும் பணியாளர்களை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சம்சுல் அனுவார் நசரா ( Shamsul Anuar Nasarah ) தெரிவித்திருக்கிறார்.
நாட்டின் எல்லைகளின் நுழைவு பகுதி மற்றும் துறைமுகைங்கள் ஆகியவற்றின்
முன்கள கட்டுப்பாட்டு நிறுவனமாக AKPS செயல்படும். தரை, கடல் மற்றும் விமான நிலைய நுழைவு மையங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனை நடடிக்கைக்கு பொறுப்பு வகிக்கும் நிறுவனமாக AKPS திகழும் என இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது சம்சுல் அனுவார் பதில் அளித்தார். இதனிடையே 2021 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரை மனித கடத்தல் வழக்குகளுக்காக 911 பேர் கைது செய்யப்பட்டதோடு 479 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக ஷம்சுல் அனுவார் கூறினார்.