Latestமலேசியா

25-லிருந்து 33: இரண்டே ஆண்டுகளில் தூய்மைக்கேடான ஆறுகள்

கோலாலம்பூர், ஜனவரி-27-மலேசியாவில் மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை இரண்டே ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு 33 ஆறுகள் மாசடைந்ததாக வகைப்படுத்தப்பட்டன; இவ்வெண்ணிக்கை 2023-ல் 25-தாக மட்டுமே இருந்ததாக, இயற்கை வளங்கள் மற்றும்

சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சு கூறியது.

2019-ல் 59-தாக இருந்த எண்ணிக்கைப் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், 2023-க்குப் பிறகு மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

நாட்டில் மொத்தமாக 486 ஆறுகள் தூய்மையானவை; 171 ஆறுகள் சிறிதளவு மாசடைந்தவையாகும்.

ஆனால் 33 ஆறுகள் மூன்றாம், நான்காம் கட்ட தூய்மைக் கேட்டு அளவைக் கொண்டுள்ளன.

என்றாலும், மிக மோசமான அளவான ஐந்தாம் கட்டத்தில் எந்த ஆறுகளும் இல்லை என அமைச்சு கூறிற்று.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!