Latestமலேசியா

29 ஆவது மாடியிலிருந்து விழுந்து 7 வயது சிறுமி மரணம்

சுபாங் ஜெயா, மே 21 – பூச்சோங்கிலுள்ள அடுக்ககத்தின் 29 ஆவது மாடியிலிருந்து விழுந்த 7 வயது சிறுமி உயிரிழந்தது. இந்த துயரச் சம்பவம் நேற்று நண்பகல் மணி 12.30 அளவில் அந்த சிறுமியின் பராமரிப்பாளரின் வீட்டில் நிகழ்ந்தது. அந்த வீட்டிலுள்ள ஜன்னலில் ஏறியபோது அதில் தடுப்பு இரும்புகள் எதுவும் இல்லாததால் அச்சிறுமி ஐந்தாவது மாடியில் விழுந்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சூப்பிரடண்ட் முகமட் பைருஸ் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் அச்சிறுமி இறந்ததை உறுதிப்படுத்தினர். அந்த சிறுமியின் தாயார் தனது வீட்டில் நோயினால் தனித்துவிடப்பட்டிருந்த மற்றொரு குழந்தையை பார்த்துக்கொண்டு மற்றும் சமைத்துக்கொண்டிருந்தபோது பராமரிப்பாளரின் வீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது. அக்குழந்தையின் தந்தை அப்போது வேலைக்கு சென்றிருந்தார். இதனிடையே 2001 ஆம் ஆண்டின் சிறார் சட்டத்தின் 31 (a) பிரிவின் கீழ் அந்த சிறுமியின் பராமரிப்பாளரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதுதாக Superintendent Mohd Fairus தெரிவித்தார். கண்காணித்துவந்தவரிட் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டடுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!