Latestமலேசியா

5 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஜலூர் ஜெமிலாங் பேட்ஜ் – அரசு RM8.4 மில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் உயர்கல்வி கூடங்களில் பயிலும் சுமார் 5.14 மில்லியன் மாணவர்களுக்கு ஜலூர் ஜெமிலாங் பேட்ஜ்களை வழங்க அரசு 8.4 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

சிறு வயதிலிருந்தே தேசபக்தியையும், நாட்டின் மீதான அன்பையும் வளர்க்கும் நோக்கத்துடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

ஜாலூர் கெமிலாங் பட்ஜெ விநியோகத்தை விரைவுபடுத்த மண்டல வாரியாக கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு, நாடு முழுவதும் 91 வியாபாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜாலூர் கெமிலாங் பேட்ஜ் அணிவது தொடர்பான வழிகாட்டுதல்களை அமைச்சு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 21 முதல் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் தங்கள் பள்ளி சீருடையில் தேசியக் கொடி பேட்ஜை அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!